Friday 3rd of May 2024 04:06:55 AM GMT

LANGUAGE - TAMIL
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன
விசேட தெரிவுக்குழுவில் இருந்து கவிந்த விலகல்!

விசேட தெரிவுக்குழுவில் இருந்து கவிந்த விலகல்!


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து விலகுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கூறியுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத்தாக்குதல் தொடர்பாகவும் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஆராயவும் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் இருந்தே கவிந்த ஜெயவர்த்தன விலகியுள்ளார்.

இது தொடர்பான விலகல் கடிதத்தினை அவர் இன்று சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளித்துள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோரும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் ரவுப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஆசு மாரசிங்க, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, காவிந்த ஜயவர்தன, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அடங்கிய விசேட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE